Archive for September 2013

என் இனியவளே   

பசுமை நிறைந்த நினைவுகளுடன்
பட்டாம் பூச்சியாய் பறந்து வா - உயிரே
உனக்காக காத்திருக்கின்றேன் 
என் இருதயத்தைப்பரிசளிக்க!

என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE


At facebook

உனக்காக காத்திருக்கின்றேன்

Sunday, September 8, 2013
0 Comments
மனித நேயம்.....

மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!


மணல் போட்டு மூடியவன் மலர் போட்டு திறக்கின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

நல்லைக்கந்தனை நனைக்க எண்ணுகிறான் நரகத்தால்
நசுக்கியதை மறந்து
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

மாயவன் சோதரனை வசப்படுத்துவது தான் செய்த
மாயைதனை முடக்குவதற்க்கா!
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

மழையாய் பலி எடுத்தவன் ஆத்ம சாந்திக்கா!
மலராய் துாவுகின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

மண்ணைக் கேட்ட நம் உறவுகளுக்கு சாமத்தியமாய்
விண்ணைக் காட்டியவன்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

பச்சிளம் குழந்தைகளை பதற பதற பலி கொண்டவன்
பதற்றமின்றி பறந்து காட்டுகின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

மலர் துாவுகிறாய் வரவேற்க தக்கதாய் இருந்தாலும் நாங்கள்
வரம் கேட்கவில்லை உன்னிடம் துர் மரணத்தை
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

இயமனுக்கு கூலி கொடுத்தவனுக்கு ஜெயம் குடுத்திடாதீர்
நாமம் போட்டு விடுவான் (தற்கால நடப்பு)
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

இறை பழியை எண்ணவில்லை அதில் உள்ள
மறை பழியை கூறி நின்றேன்.
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

தமிழனாய் சிந்தித்து முடிவெடுங்கள்...
மடத்தமிழனாய் இருந்தது போதும்
மாபாவி செய்வது சரியா!

அன்புடன்
Ambi Rajee

மனித நேயம்.....( மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!)

Wednesday, September 4, 2013
0 Comments
என் அன்பே   

நம் காலத்தின் ஓட்டம் எமை 
கரை காண வைத்தாலும் - சில 
காரணங்கள் எம்மை நிலையாக
கரை சேர விடுவதில்லை...

At Facebook


நம் கரை காணலாமா..

Sunday, September 1, 2013
0 Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -